search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிப்லப் குமார் தேப்"

    ஏடாகூடமாக எதையாவது சொல்லி நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் திரிபுரா முதல்வர் இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் கூடுவதற்கான காரணத்தை கூறி வைரல் ஆகியுள்ளார். #Biplab #BiplabKumarDeb
    புதுடெல்லி:

    திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

    இதனால், பிப்லப் தேசிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகவே, பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசினார்.

    ‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும். மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கு எப்படி தெரியும்?’ எனவும் அவர் கூறியிருந்தார். பிப்லப்பின் இந்த கருத்தை முன்வைத்தும் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில், மீண்டும் பிப்லப் வைரலாகியுள்ளார். இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 

    ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என பிப்லப் கூறினார்.

    எந்த விதமான அறிவியியல் தரவுகளும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என அம்மாநில கட்சிகள் இதனை விமர்சனம் செய்துள்ளன. #Biplab #BiplabKumarDeb
    திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து முதல்வர் பிப்லப் குமார் தேப் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தார். #BiplabKumarDeb
    அகர்தலா:

    வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. திரிபுரா மாநிலத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மோகன்புரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பிப்லப் குமார் தேப் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், சீரமைப்பு பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளம் புகுந்த தெருக்களில் உள்ள நீரில் இறங்கி அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வராக பதவியேற்றதில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BiplabKumarDeb

    சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப், தற்போது ரவீந்திரநாத் தாகூர் குறித்து பேசி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். #BiplapKumarDeb
    அகர்தலா:

    சமீபகாலங்களில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும் சிரிக்கவைப்பதாகவும், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்? என சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது. அந்த வகையில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருபவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப்.

    பாஜகவைச் சேர்ந்த இவரது பிரசித்தி பெற்ற பேச்சுகளில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது, ராமாயண காலத்திலேயே இன்டர்நெட் வசதி, செயற்கைக் கோள் போன்றவை இருந்தது போன்றவையாகும்.

    இந்நிலையில், தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்தவர் ரவீந்திரநாத் தாகூர் என கூறியுள்ளார்.

    முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பேசிய திரிபுராவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ்புர்மான், முதல்வரின் இந்த கருத்து அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ‘1919-ம் ஆண்டில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் போராட்டத்தின் போது, தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருமகன் பட்டத்தை நிராகரித்ததாகவும், அதனால், எனது தாத்தா மன அமைதியின்றி இருந்ததாகவும் அவரது டைரியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கருத்து முட்டாள்தனமாக உள்ளது’ என்றும் தெரிவித்தார்.

    மேலும், முதல்வரின் கருத்துக்கு திரிபுராவின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிராஜித் சின்ஹா கூறுகையில், ’முதல்வரின் இதுபோன்ற கருத்துக்களால் வெட்கப்படவேண்டியிருக்கிறது’ என்றார்.
    ×